Friday, September 07, 2007


மீசைக் கவிஞன் பாரதியின் பாடல் - நீவீர் படித்து இன்பமுற....

காணி நிலம் வேண்டும்!


காணி நிலம் வேண்டும், - பராசக்தி
காணி நிலம் வேண்டும்;- அங்கு
தூணி லழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் - அந்தக்

காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும்;- அங்கு
கேணி யருகினிலே - தென்னைமரம்
கீற்று மிள நீரும்...

பத்துப் பனிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;- நல்ல
முத்துச்சுடர் போலே - நிலாவொளி
முன்பு வரவேணும்;- அங்குக்

கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்;- என்றன்
சித்த மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு
பத்தினிப் பெண் வேணும்;- எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டு தரவேணும்; அந்தக்

காட்டு வெளியினிலே, - அம்மா, நின்றன்
காவலுற வேணும்; என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித் திடவேணும்.